நீ சூடிடும் ரோஜாக்களுக்கு
தெரிவதே இல்லை
நடந்துவரும் ரோஜா
நீ என்று
நீ பிறந்த அந்நாளை
கவிதைகள் தினமாய்...
கொண்டாட வேண்டுமாம்,
அடம்பிடிக்கின்றன கவிதைகள்...
உன்னிடம் பலமுறை கேட்க
நினைத்தது
நினைத்து நினைத்து
பலமுறை கேட்க மறந்தது
நீ மட்டும் ஏன் இவ்வளவு அழகா இருக்க?